சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலான மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
புதன்கிழமை அன்று தெலுங்கானா முதல் குமரிக்கடல் பகுதி இடையே ராயலசீமா மற்றும் உள்தமிழகத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அத்துடன் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதற்கேற்றபடி சென்னையில் சென்னை மெரீனா, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக்நகர், தியாகராயநகர், கோடம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், தாம்பரம்,வண்டலூர்,பூந்தமல்லி,ஆவடி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருக்கிறது.