முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா இருந்த போது நாங்கள் ஜீரோ: அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

புதுதில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் பொருட்டு, அதிமுகவின் இரு அணிகளும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுக அம்மா அணி சார்பாக 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக அம்மா அணி வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இரு அணிகள் இணைப்பை பொறுத்தவரை அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தால் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வோம். நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக பசுமாடுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பொறுத்த வரை மத்திய அரசு பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயன்படாது. தமிழக அரசின் கருத்தை மத்திய அரசிடம் தெரியப்படுத்துவோம் ஜல்லிக்கட்டு விவகாரத்தை எப்படி கையாண்டோமோ அப்படியே இதையும் கையாளுவோம். 

அமைச்சர்களின் செயல்பாடு தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தெரிவித்தார். அவர் உயிருடன் இருந்த பொழுது அவரே அனைத்தையும் பார்த்துக் கொண்டார்

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →