முகப்பு
தமிழ்நாடு

சோதனைகளை சாதனையாக்கிய மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்: எடப்பாடியை பாராட்டிய தமிழிசை 

சோதனைகளை சாதனையாக்கிய மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2019 at 6:31 PM
பகிர்:

சென்னை: சோதனைகளை சாதனையாக்கிய மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று வெள்ளியுடன் (பிப்.15) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் சோதனைகளை சாதனையாக்கிய மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.