முகப்பு
தமிழ்நாடு

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மேலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை சென்னையில் மளிகைக்கடைகள், இறைச்சிக் கடைகள், பேக்கரிகள் இயங்காது என்றும் அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும், பறக்கும் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →