இ-பாஸ் வழங்க மாவட்டந்தோறும் இரு குழுக்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஇ-பாஸ் வழங்க மாவட்டந்தோறும் இரு குழுக்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி,
தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இ-பாஸ் வழங்க ஒரு குழு மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளது. அவசியத் தேவைகளுக்கு இ-பாஸ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, மாதம் ஒருமுறை இ-பாஸை புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரத் தடையில்லை.
எனினும், மக்கள் இ-பாஸை அவசியத் தேவைகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்' என்று தெரிவித்தார்.