‘புரெவி’ புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் தீவிரமடைந்து வருவதால் வியாழக்கிழமை காலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமானங்களின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.