திருவள்ளூரில் சாலை மறியல்: 100 பேர் கைது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடுதிருவள்ளூரில் சாலை மறியல்: 100 பேர் கைது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் கோரி இரண்டாவது நாளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுதில்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்தசியர் அலுவலகம் முன்பு பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுதில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகளைப் பெருவாரியாகப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய காவல்துறையினர் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.