டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
தர்மபுரியில் இன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளரிடம் பேசியபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக யாரிடமும் கூட்டணி வைப்பார்.
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றி 500 நாட்கள் கடந்த நிலையில் தமிழக ஆளுநர் இதுவரை முடிவெடுக்காதது சட்டவிரோதம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்' என்றார்.