சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள அறிவான்மோழி கிராமத்தில் உள்ள ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.