முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.70 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம், மற்றும் விழுப்பனூரில் ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம், மற்றும் விழுப்பனூரில் ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு ஊராட்சிக்குட்பட்ட முள்ளிக்குளம் மற்றும் விழுப்பனுர்  என இரண்டு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை நீண்டகாலமாக பராமரிக்காததன் காரணமாக கரைகள் வலுவிழந்தும், மதகுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. 

மேலும் இந்த கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயில் முட்புதர்களும் சீமை கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே கால்வாயை தூர்வாரி கரைகளையும் மதகுகளையும் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றுப் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு சார்பில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 70 லட்சம் மதிப்பில் இந்த கண்மாய்களை  சீரமைக்கும் பணி தொடங்கியது.நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கலந்துகொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் முகைதீன் ஆரீப்ரகுமான், நிலவள வங்கி தலைவர் முத்தையா மாவட்ட கவுன்சிலர்கள் கணேசன் வசந்தி மான்ராஜ், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தைலாகுளம் மணிமுள்ளிக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் மணிமாலா, ஒப்பந்ததாரர்கள் சோதிமுனி முத்துக்குமார் மற்றும் திலகர்,தங்கமுத்து உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →