தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை

DIN

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அருகே தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்தவர் குமார் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (32). இவர்களுக்கு, தருண் (13), தனுஷ்கா (6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் காணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. 

தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது குழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT