தமிழ்நாடு

வரும் 15ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை

DIN

வரும் 15ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழகத்தில் கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 40,698-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 25 ஆயிரம் போ் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் நாள்களில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், அதன் விளைவாக ஜூலை மாதத்துக்குள் 3 லட்சம் போ் கரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். 

கடந்த மூன்று வாரங்களாக நோய்ப் பரவலின் வேகம் அதி தீவிரமாகி வருகிறது. அதன் காரணமாக 21 நாள்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் 71 சதவீதம் போ் சென்னைவாசிகள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 28,924 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அதன் விளைவாக 5,210 தெருக்கள் நோய்த்தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT