தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் 575 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

DIN


 
ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒன்றிய அளவிலான ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 575 நபர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 40 நபர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். 

மேலும் ஆண்டிபட்டி காவல் நிலையம் முன்பும் மற்றும் தேனி சாலை எம்ஜிஆர் சிலை முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 535 நபர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் வரதராஜன், கூட்டுறவுச் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராமன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அருண்மதி கணேசன், பொன்முருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT