தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

DIN


தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் பங்கேற்றார். 

அப்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வைத்த முக்கியக் கோரிக்கைகள்:

  • மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 3,000 கோடி வழங்க வேண்டும்.
  • தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2-வது தொகுப்பு நிதியை விடுவிக்க வேண்டும். 
  • கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி ஒதுக்க வேண்டும்.
  • மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தற்போது விடுவிக்க வேண்டும்.
  • கரோனாவை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT