காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் குடிமராமத்து பணி தொடக்கம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார் குடி மாரியம்மன் கோவில் அருகே தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார் குடி மாரியம்மன் கோவில் அருகே தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.சாம்ராஜ் முன்னிலை வகித்தனர்.
வடவாற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான சாக்கடை போன்று காணப்படும் உடையார்குடி வாய்க்கால் உள்ளிட்ட 5 வாய்க்கால்கள் 26 லட்சம் நிதியில் சுமார் 27 கிலோ மீட்டர் தூர் வாரப் படுகிறது. இதனால் மழைக்காலங்களில் காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதி, உடையார்குடி, ராமர் கோட்டகம், ருத்திர சோலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் நிலை ஏற்படாது.
மேலும் இந்த கிராமங்களில் வரும் காலங்களில் விளை நிலங்களில் தங்குதடையின்றி பாசனம் பெற்று விவசாயப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கொள்ளிடம் வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ்.அருணகிரி, உதவிப் பொறியாளர் டி.வெற்றிவேல், ஒன்றியச்செயலாலர் வாசு முருகையன் மற்றும் நிர்வாகிகள்,எம்ஜிஆர் தாசன் ,பி.எம்.எஸ். அசோகன், எஸ்.தோதாத்திரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.