சிவகாசி வட்டத்தில் மழையினால் 5 வீடுகள் சேதம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையினால் 5 மண் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையினால் 5 மண் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது: சிவகாசி திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் கீழே திருத்தங்களில் மூன்று வீடுகளும் திருத்தங்களில் இரண்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மண்ணெண்ணெய், அரிசி, வேஷ்டி சேலை மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்