தமிழ்நாடு

கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா

DIN

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கோகுல் முன்னிலை வகித்தார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இதில் கட்சி அலுவலகத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு சக்கர நாற்காலி வண்டிகள் மற்றும் அன்னதானத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், கிளை செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில்  50 பெண்கள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT