முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் மீண்டும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 6 ஜனவரி 2021, 12:02 pm IST
விழுப்புரத்தில் மீண்டும் மழை
பகிர்:


விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பெய்தது. சிறு இடைவெளியுடன் மீண்டும் பலத்த மழை தொடங்கி பெய்து வருகிறது.

இதேபோல் கண்டமங்கலம், திண்டிவனம், முகையூர், உளுந்தூர்பேட்டை, வளவனூர் பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்து வருகிறது.

Advertisement

இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர் மழையால் நீர்நிலை, வாய்க்கால்களில் மழைநீர் வழிந்தோடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.