சென்னை மாநகராட்சி அலுவலகம் 
தமிழ்நாடு

இது உண்மையல்ல.. பொய்ச் செய்தி: சென்னை மாநகராட்சி விளக்கம்

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

DIN


தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஆனால், பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கு குறித்தோ தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

மக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலும் சிலர், தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட விருப்பதாகவும், எந்தப் பணிகளுக்கு அனுமதி, எந்தப் பணிகளுக்கு எல்லாம் தடை விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக ஒரு புகைப்படத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அது வதந்தி என்றும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் இதுபோன்ற தகவல்கப் படித்து உண்மை என்று நம்ப வேண்டாம் என்றும், உண்மை என்று நம்பி அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் அறிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT