கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி 
தமிழ்நாடு

கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

DIN


சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரியின் மாணவர் விடுதியில் 250 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

சென்னையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. நாள்தோறும் கரோனா பாதிக்கப்படுவரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

SCROLL FOR NEXT