தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள்

DIN


தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில்,

தமிழகத்தில் முதற்கட்டமாக மலிவான வாடகை குடியிருப்புகள் சென்னை, கோவையில் அமைத்துத் தரப்படும்.

பிறகு தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

கடந்த 100 நாள்களில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமான 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பழனி முருகன் கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் ஆகியவற்றை சீரமைக்கப்படும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT