தமிழ்நாடு

கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து பள்ளி சிறுமி சாதனை!

DIN

சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்த 4 வயது பள்ளி சிறுமி அனுஸ்ரீ  சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், நெடுஞ்சேரி அருகே உள்ள மனக்குடியான்இருப்பூர் பகுதியை சேர்ந்த மோகன் - சத்யா தம்பதியின் இரண்டாவது மகள் அனுஸ்ரீ (4). தனியார் பள்ளியில் யுகேஜி பயிலுகிறார். 

இதையுடம் படிக்க | 
வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? 

சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் 4 வயது சிறுமி அனுஸ்ரீ  கிடைமட்ட கம்பியில் இரண்டு கைகளால் தொங்கிச் சென்று 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளார். 

பின்னர் உலக சாதனை புத்தக நிறுவனம் சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன் வழங்கினார். 

சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்குகிறார் தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்கருப்பன்.

சிதம்பரம் வர்த்தக சங்க இணைச் செயலாளர் ஜி.முரளிதரன், கடலூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஷேக்கமால், முதுகலை ஆசிரியை ஜி.சுந்தரி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பொது முகமையர் பிரபு, கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியை நடத்தி சான்றிதழ் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT