தமிழ்நாடு

ஆய்வு மேற்கொள்ளும்போதே நிலஅதிர்வை உணர்ந்தோம்: மாவட்ட வருவாய் அலுவலர்

DIN

ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே 4முறை காலையில் நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 
நிலஅதிர்வு ஏற்படக் காரணம் என்ன என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், நிலஅதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 

நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு மேற்கொள்ளும்போதே சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நவ.29 மற்றும் டிச.23ஆம் தேதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT