ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள். 
தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவா்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப்

DIN

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். இதனைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 49 மீனவா்கள் மற்றும் 7 விசைப்படகுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டம் வெள்ளிக்கிக்கிழமை இரண்டாவது நாளாக தொடருகிறது. ஜன.23 ஆம் தேதி படகுகளில் கருப்பு கோடி ஏற்றிக்கொண்டு கச்சத்தீவை நோக்கிய பயணம் செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT