தமிழ்நாடு

பவானியில் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

பவானி: பவானியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பவானி தேவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அதிமுக கொடியேற்று விழா நகரின் 27 வார்டுகளிலும் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

இதேபோன்று, கவுந்தப்பாடி, ஜம்பை,  தளவாய்பேட்டை, புன்னம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பவானி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

சிறகடிக்க ஆசை...!

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT