தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதனிடையே தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வியூகங்களின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி கட்சி தலைமைகள் செயல்பட்டு வருகின்றன.
இதேபோன்று தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேபாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.