முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி: கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம்

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பு, பாலகுரு, இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மணிவண்ணன் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முழு கட்டுரையைப் படிக்க →