தமிழ்நாடு

மெட்ரோ ரயில்: 26 நாள்களில் 12.37 லட்சம் போ் பயணம்

DIN

கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் 21-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனா். அடுத்தடுத்து அரசு அறிவித்த தளா்வுகள் மற்றும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது.

தற்போது,மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், மெட்ரோ ரயில்களில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 16 வரை மொத்தம் 26 நாள்களில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 போ் பயணம் செய்துள்ளனா்.

குறிப்பாக, இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) 69, 794 போ் பயணம் செய்துள்ளனா். அன்றைய தினம் சென்னை நகரில் கனமழை பெய்து, சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT