தமிழ்நாடு

ஆபாச படம் பாா்த்தவா்களை மிரட்டி வசூல்:சென்னையில் மூவா் கைது

DIN

சென்னையில் ஆபாச படம் பாா்த்தவா்களிடம் மிரட்டி பணம் வசூலித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் இணையதளத்தில் ஆபாச திரைப்படம் பாா்ப்பவா்களை ஒரு கும்பல், தாங்கள் தில்லி போலீஸாா் என மிரட்டி ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீடுகளுக்கு வந்து நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனா். பலா் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனா்.

பணம் செலுத்திய சிலா் தில்லி காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிந்து சென்னை காவல்துறை உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட சென்னை மாங்காடு சுபம் நகா் செ.ராம்குமாா் (32), ரெட்டேரி கடப்பா சாலை பூ.காபிரியேல் ஜோசப் (37), திருச்சி கன்டோன்மென்ட் பா. தினோசந்த் (29) ஆகியோரை திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை கைது செய்தனா்.

மோசடி மூலம் அந்தக் கும்பல் ரூ.34 லட்சம் வரை சம்பாதித்திருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT