தமிழ்நாடு

தமிழகத்துக்கு இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை  2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. 

சென்னையில் வழக்கறிஞர்களுக்கான தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்தபின்னர் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலைதான் உள்ளது.

தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகள், இன்று பகல் 12 மணிக்குள் தீர்ந்துவிடும் என்று கூறினார். 

இதையடுத்து, மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT