தமிழ்நாடு

ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா

DIN


சென்னை: தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி. மேலும், சைலேந்திர பாபுவுக்கு திரிபாதி பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பிறகு, ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT