முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது.

Updated On : 21 மார்ச் 2021, 1:19 pm IST
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி .
பகிர்:

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு, மத்திய அரசு வழங்கிய ரூ. 15,000 கோடி தொகையை என்ன செய்தது என தெரியவில்லை, முதல்வர் நாராயணசாமி தலைமையில் முறைகேடு நடந்துள்ளதாக, பாஜக தரப்பில் சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டு குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி கூறியதாவது:

Advertisement

Advertisement

பாஜக ஆதாரமற்ற குற்றசாட்டுகளை காங்கிரஸ் அரசு மீதும், என் மீதும் வைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை மூடியது, அப்போதை ஆளுநர் கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய பாஜக அரசு.

அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடியது, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்தது கிரண்பேடி. அதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது.

புதுச்சேரி அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாக அமீத்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தினேன். இதுவரை நிரூபிக்கவில்லை. 
நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் சவால் விடுத்தேன், பாஜக வாய்மூடி உள்ளது.

புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளையும் மிரட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என பாஜக முயற்சி செய்கிறது என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.