தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கம்
பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சென்னை, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்துகளை, திங்கள்கிழமை முதல் தளா்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதால், மீண்டும் இரு நாள்களுக்கு இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போலவே, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாகவும் பொதுமக்களின் தேவைக்கேற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.