தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்புகளும் நன்றிகளும்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து வரும் பல்வேறு அறிவிப்புகளால் பயன்பெற்றவர்கள் மற்றம் பயன்பெறுபவர்கள், அவரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து வரும் பல்வேறு அறிவிப்புகளால் பயன்பெற்றவர்கள் மற்றம் பயன்பெறுபவர்கள், அவரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று,
தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிட்டமைக்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை காவலர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். உடன் காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் உள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும் படிக்க.. குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரி அமைத்திட உதவியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, செயலாளர் எஸ். கோவிந்தப்பன், பொருளாளர் எம். கந்தசாமி, துணைத் தலைடிவர்கள் பி. முருகசாமி, ஆர். குப்புசாமி, இணைச் செயலாளர் என். துரைசாமி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
இதையும் படிக்கலாமே.. கல்லீரல் புற்றுநோய்க்கு மணத்தக்காளி மூலம் சிகிச்சை: அமெரிக்க எஃப்டிஏ அங்கீகாரம்
தமிழகத்தில் சிறப்புக் குழந்தைகள் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற அனுமதி அளித்தமைக்காக, சங்கமித்ரா அறக்கட்டளை சார்பில் ஜிஷா ரமேஷ், கிரேஷ், அன்னபூரணி, வனிதா, சதீஷ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.