முகப்பு
தமிழ்நாடு

மழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு

தமிழகம், புதுவையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் விரைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகம், புதுவையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் விரைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்திலிருந்து அதிநவீன சாதணங்களுடன் நாகப்பட்டினம், காரைக்கல், புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் அனுப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்பதால் மீட்புப் பணிகளுக்கு தேவையான தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.