தமிழ்நாடு

மானாமதுரை அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

மானாமதுரை போலீஸ் சரகம் வாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆனந்தகுமார் (35 ), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகள் உள்ளனர். 

முத்தனேந்தல் என்ற இடத்திலிருந்து வாகுடி கிராமத்திற்கு ஆனந்தகுமார் பைக்கில் சென்றார். அப்போது  வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மானாமதுரை போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT