முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரை அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
மானாமதுரை அருகே வாகுடி செல்லும் வழியில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஸ்கூட்டி பைக்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

மானாமதுரை போலீஸ் சரகம் வாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆனந்தகுமார் (35 ), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகள் உள்ளனர். 

முத்தனேந்தல் என்ற இடத்திலிருந்து வாகுடி கிராமத்திற்கு ஆனந்தகுமார் பைக்கில் சென்றார். அப்போது  வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மானாமதுரை போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →