மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் பொறுப்பு: இபிஎஸ்
மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு அரசு உரிய விளக்கம் அளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியது:
“வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை குறித்தும், சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை குறித்தும் சட்டப்பேரவையில் பேச முயன்றேன். அதற்கு உரிய பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம். நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையால் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என மாணவர்கள், பெற்றோர் குழப்பமடைந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தனர். இதை நம்பி மாணவர்கள் நீட் தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை. நீட் தேர்வு பிரச்னையில் அரசு தெளிவான முடிவெடுத்து சொல்லவில்லை.”