வேதாரண்யத்தில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி இன்று (செப்.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி இன்று (செப்.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட மாதிரி கல்லூரி, கடந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.
நிர்வாக மாற்றத்துக்குப் பின்னர் பராமரிப்பு உள்ளிட்ட செலவின தேவைகளுக்கான தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, ஊதியம் உள்ளிட்ட நிலுவைத்தொகை போன்றவைகளை வழங்கவும், நிர்வாக செலவினங்களை ஏற்கவும் கோரி கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.