தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கும், சென்னையில் 222 பேருக்கும், ஈரோட்டில் 116 பேருக்கும், செங்கல்பட்டில் 107 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,52,115 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,624 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,99,567 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 35,427 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,60,057 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்றைய நிலவரப்படி 17,121 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT