முகப்பு
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி உள்பட மத விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட், 2021 at 10:10 PM
விநாயகர் சதுர்த்தி: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:32 AM

விநாயகர் சதுர்த்தி உள்பட மத விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத விழாக்கள் மற்றும் வழிபாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி இல்லை. 

வீடுகளில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தங்களது வீடுகள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளில் தனித் தனியாகச் சென்று விநாயர் சிலைகளை கரைக்க அனுமதி.

புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளாங்கண்ணியில் மரியன்னையின் பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.