முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை காரணமாக நேற்று காலை வினாடிக்கு 15,740 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 87.38 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.64 அடி உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →