முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06.04.2022: உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்
இடி,  மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.04.2022 முதல் 09.04.2022 வரை:  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்யையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.    
 

முழு கட்டுரையைப் படிக்க →