மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவியை சுத்தியால் தாக்கிக் கொன்றவருக்கு ஆயுள்த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவியை சுத்தியால் தாக்கிக் கொன்றவருக்கு ஆயுள்த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2020ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிக்கு ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் தெருவில் வசித்து வந்த சாவிரித்திரியை, குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவரது கணவர் சுத்தியால் அடித்துக் கொன்றார். இது குறித்து சாவித்திரியின் சகோதரி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி ரவி கைது செய்யப்பட்டார்.
ரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.