பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கம்பத்தில் சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் சரக்கு ஏற்றும் ஆட்டோ தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்கம் உள்ளது.
இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன, மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கம்பத்தில் சரக்கு ஏற்றும் வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை, வாரச்சந்தை அருகே அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் செல்வ பிரபு கூறியது,
மத்திய அரசின் எரிபொருள் விலை உயர்வு எங்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது, பொதுமக்களிடம் அதிக வாடகை பெறமுடியவில்லை. நிதி நிறுவனங்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை, எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.