முகப்பு
தமிழ்நாடு

பாலக்காட்டில் தேசிய செட்டியார்கள் பேரவை மாவட்ட மாநாடு

கேரள மாநிலம் பாலக்காட்டில் செட்டி மகாசபை மாவட்ட மாநாடு, மற்றும் பேரணி நடைபெற்றது.

Updated On : 12 ஏப்ரல், 2022 at 12:55 PM
கேரள மாநிலம் பாலக்காட்டில் செட்டியார் பேரவை மாநாட்டை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:27 PM

கம்பம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் செட்டி மகாசபை மாவட்ட மாநாடு, மற்றும் பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர்  ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அங்குள்ள தனியார் கல்லூரி மைதானத்திலகருந்து பாலக்காடு நகர முக்கிய வீதிகள் வழியாக நூற்றுக்கணக்கான ஆண், பெண்  பொதுமக்கள்  ஊர்வலமாக சென்றனர்.

Advertisement

பின்னர் அங்குள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஏ.ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது, கேரள மாநிலத்தில் வாழ்கின்ற செட்டியார் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கேரள அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்மூலம் கல்வியிலும் பொருளாதாரத்தில் சமூகம் மேம்பாடு அடையும். தமிழக மக்களும் கேரள மக்களும் ஒற்றுமை உணர்வோடு சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றோம்.

அந்த நட்பு நீடிக்க வேண்டும். கேரள மாநில  தலைநகரான திருவனந்தபுரத்தில் கவன ஈர்ப்பு மாநாடு தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும், இவ்வாறு பேசினார்.

மாநாட்டில் கேரள மாநில செட்டி மகாசபை மாநில தலைவர் சசிதரன், துணைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நாராயணன், தேசிய செட்டியார்கள் பேரவை தலைமை நிலைய செயலாளர் ரகுபதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.