தமிழ்நாடு

பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணைந்த ஆட்சி உருவாகும்: வீ.கே.சசிகலா பேட்டி

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, ஜெயலலிதா ஆட்சி உருவாகும் என்று மதுரை விமானநிலையத்தில் வீ.கே.சசிகலா தெரிவித்தார். 

DIN


பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, ஜெயலலிதா ஆட்சி உருவாகும் என்று மதுரை விமானநிலையத்தில் வீ.கே.சசிகலா தெரிவித்தார். 

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வீ.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை மற்றும் சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்கிறேன்.

தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம் என்று சசிகலா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT