வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 3 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அக்.25-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டு சற்று தாமதமாக அக்.29-ம் தேதி தொடங்கியது.
இதன்காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சீர்காழி, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருந்தது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாகவும், இந்தாண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையிலான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைந்துள்ளது.
டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 377.3 மி.மீ ஆகும். ஆனால் இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
வேலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, நாகை, தூத்துக்குடி, திருச்சி உள்பட 24மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்யுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.