தமிழ்நாடு

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணி பாதிப்பு

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.

காற்று சுழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு இருப்பதால் உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஏற்பட்ட மழைப் பொழிவு வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 69.6 மி.மீ, தலைஞாயிறு 23.2 மி.மீ,  கோடியக்கரையில் 80 மி.மீ மழை பதிவானது.

வேதாரண்யம் பகுதியில் கனமழை தொடர்வதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT