முகப்பு
எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்
தமிழ்நாடு

எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி நகரப் பகுதியில் கட்டுப்பாட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு

எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி நகரப் பகுதியில் கட்டுப்பாட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
எடப்பாடியில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்
பகிர்:


எடப்பாடி: தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி நகரப் பகுதியில் கட்டுப்பாட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையிலான காவல்துறையினர். நகராட்சி ஆணையாளர் சேகர்,மேலாளர் பழனியப்பன் தலைமையிலான நகராட்சி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் நகராட்சி பகுதியில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிடும் வகையில் பயணிப்போர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்து வருகின்றனர். 

மேலும் முகக் கவசம் அணியாமல் பயணிக்கும் நபர்களுக்கு காவல்துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

செவ்வாய் அன்று நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விடுக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட, ஜெ.கே.பி ரோடு , சேலம் பிரதான சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  காவல்துறையினர் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →