தமிழ் பயிற்றுமொழி: பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் விலக்கு
தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை நாளை முதல் செலுத்தவும், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து வருகிற 20 ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள், ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
செய்முறைத் தாள் கொண்ட தேர்வுகளுக்கு ரூ. 225 எனவும் செய்முறை அல்லாத தேர்வுகளுக்கு ரூ. 175 கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கண்பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசுப்பள்ளிகளில் பயிலும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.